/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெளி மாநில வியாபாரிகள் வந்ததால் ரூ.92 லட்சத்துக்கு வெல்லம் ஏலம்
/
வெளி மாநில வியாபாரிகள் வந்ததால் ரூ.92 லட்சத்துக்கு வெல்லம் ஏலம்
வெளி மாநில வியாபாரிகள் வந்ததால் ரூ.92 லட்சத்துக்கு வெல்லம் ஏலம்
வெளி மாநில வியாபாரிகள் வந்ததால் ரூ.92 லட்சத்துக்கு வெல்லம் ஏலம்
ADDED : அக் 11, 2024 07:11 AM
ப.வேலுார்: ப.வேலுார், பிலிக்கல்பாளையம் ஏல மண்டியில் வெளியூர் வியாபாரிகள் ஏலம் எடுக்க அதிக அளவில் வந்ததால் வெல்லம் விலை உயர்ந்தது.
பரமத்தி வேலுார் வட்டாரத்தில் பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர்.
உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்கெட்டில் சனி மற்றும் புதன்கிழமைகளில் விற்பனை செய்கின்றனர். இங்குள்ள, 13 வெல்ல மண்டிகளில் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் வெல்லம் விலை உயர்ந்தது. கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,300 ரூபாய்-, அச்சு வெல்லம், 1,310 -ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வாரம் உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,440 ரூபாய், அச்சு வெல்லம் ஒரு சிப்பம், 1,410 ரூபாய்க்கு விற்பனையானது.
உருண்டை வெல்லம், 4,800 சிப்பங்கள், அச்சு வெல்லம், 1,800 சிப்பங்கள் ஏலத்திற்கு வந்திருந்தது. மொத்தம், 92 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.