sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வனத்துறையை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

/

வனத்துறையை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

வனத்துறையை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

வனத்துறையை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 25, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்,:கொல்லிமலையில், அனுபவ நிலத்தில் நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை, வனத்துறையினர் பிடுங்கி எறிவதாக கூறி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், இ.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாலுகா செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். அதில், கொல்லிமலை தாலுகா, தேவனுார் நாடு, சூழவந்திப்பட்டி கிராமத்தில் வரகு, சாமை, திணை, உள்ளிட்ட சிறுதானியங்களை பல தலைமுறைகளாக பயிரிட்டு வந்த அனுபவ நிலத்தில், தற்போது சில்வர் ஓக் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம்.

அதை பராமரிப்பு பணி மேற்கொள்வதாக அந்த சில்வர் ஓக் மரக்கன்றுகள் நடப்பட்டதை பிடுங்கி எறிந்து அராஜகத்தில் ஈடுபடும் வனத்துறையின் அத்துமீறலை நிறுத்தக்கோரியும், 2006-வன உரிமை சட்டப்படி அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us