sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முட்டை கொள்முதல் விலை உச்சத்தை தொட்டதால் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவு

/

முட்டை கொள்முதல் விலை உச்சத்தை தொட்டதால் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவு

முட்டை கொள்முதல் விலை உச்சத்தை தொட்டதால் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவு

முட்டை கொள்முதல் விலை உச்சத்தை தொட்டதால் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவு


ADDED : டிச 08, 2024 02:51 AM

Google News

ADDED : டிச 08, 2024 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாக, 590 காசு நிர்ணயம் செய்துள்ள நிலையில், ஏற்றுமதி, 50 சதவீதம் சரிந்துள்ளது. அதனால், ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில், 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

அவற்றின் மூலம் தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது.

அதை பண்ணையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

கடந்த, நவ., 1ல் கொள்முதல் விலை, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்து, கடந்த, 3ல், 590 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

முட்டை வரலாற்றில், உச்சபட்ச விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது. விலை உயர்வு காரணமாக, ஏற்றுமதி சரிந்துள்ளது.

இதுகுறித்து, முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது:

முட்டை ஏற்றுமதி தினமும், 40 லட்சம் இருந்த நிலையில், தற்போது, 50 சதவீதம் குறைந்து, 20 லட்சமாக சரிந்துள்ளது.

கொள்முதல் விலை குறைந்தால் தான் ஏற்றுமதி அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினர்.






      Dinamalar
      Follow us