நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 550 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 555 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நில-வரம்:
சென்னை, 600, ஐதராபாத், 570, விஜயவாடா, 585, பர்வாலா, 609, மும்பை, 640, மைசூரு, 597, பெங்களூரு, 595, கோல்-கட்டா, 645, டில்லி, 640 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையை, 3 ரூபாய் குறைத்து, ஒரு கிலோ, 97 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்-டத்தில், ஒரு கிலோ, 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலை, 5 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ, 73 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.