ADDED : ஆக 11, 2025 11:36 AM
நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
இதையடுத்து, 165 காசுக்கு விற்ற முட்டை விலை, 10 காசு உயர்த்தி, 175 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை(காசுகளில்) நிலவரம்:
சென்னை, 330, ஐதராபாத், 160, விஜயவாடா, 505, பர்வாலா, 191. மும்பை, 510, மைசூரு, 505, பெங்களுரு. 495, கொல்கட்டா, 570, டில்லி, 505 என்று, நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
இதேபோல், நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட் டைக்கோழி ஒரு கிலோ, 97 ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கறிக்கோழி ஒரு கிலோ, 82 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.