/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
/
தமிழகம், கேரளாவில் முட்டை விலை உயர்வு
ADDED : அக் 30, 2024 11:55 PM
நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில்
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நடந்தது. அதில்,
முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள்
விவாதித்தனர். இதையடுத்து, 535 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு
உயர்த்தி, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
தீபாவளி
பண்டிகையையொட்டி, நுகர்வு அதிகரித்துள்ளதால், முட்டை கொள்முதல்
விலை, மூன்று நாட்களில், 15 காசு உயர்ந்துள்ளது. இது,
பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.நாட்டின் பிற
மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 585,
ஹைதராபாத், 530, விஜயவாடா, 555, பர்வாலா, 521, மும்பை, 600, மைசூரு,
582, பெங்களூரு, 580, கோல்கட்டா, 600, டில்லி, 545 என, நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர்,
வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 107
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையை, எவ்வித
மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், ஒரு கிலோ, 111 ரூபாய்க்குவிற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.