ADDED : அக் 30, 2024 06:39 AM
நாமக்கல்: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
இதையடுத்து, 530 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 535 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, நுகர்வு அதிகரித்துள்ளதால், முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இது, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 585, ஐதராபாத், 525, விஜயவாடா, 550, பர்வாலா, 515, மும்பை, 595, மைசூரு, 577, பெங்களூரு, 575, கோல்கட்டா, 600, டில்லி, 545 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 107 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையில் எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், ஒரு கிலோ, 111 ரூபாய்க்குவிற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.