/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் உண்டியலில் திருடிய முதியவர் கைது
/
கோவில் உண்டியலில் திருடிய முதியவர் கைது
ADDED : ஆக 18, 2025 03:20 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், வேப்பம்பட்டியில் பிரசித்தி பெற்ற வீர-மாத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்-தர்கள், காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்-டுள்ளது. இந்த உண்டியலை, கடந்த, நான்கு நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் உடைத்து, அதில் இருந்த, 22,000 ரூபாயை திருடிச்-சென்றனர். இதுகுறித்து, புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வந்-தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில் வேப்பம்-பட்டியை சேர்ந்த நடேசன், 63, என்பவரை பிடித்து இன்ஸ்-பெக்டர் கோமதி மற்றும் போலீசார் விசாரித்தனர். இதில், நடேசன், மது குடிக்க பணம் இல்லாததால், மது போதையில் உண்டியலை உடைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.