sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தாயுமானவர் திட்டத்தால் முதியவர்கள் மகிழ்ச்சி

/

தாயுமானவர் திட்டத்தால் முதியவர்கள் மகிழ்ச்சி

தாயுமானவர் திட்டத்தால் முதியவர்கள் மகிழ்ச்சி

தாயுமானவர் திட்டத்தால் முதியவர்கள் மகிழ்ச்சி


ADDED : ஆக 15, 2025 02:44 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, பவித்திரம் அருகே, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின்படி, வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வழங்கியதால் முதியவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

எருமப்பட்டி யூனியன், பவித்திரம் பாரதி நகரில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, 20க்கும் மேற்பட்ட முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க, 2 கி.மீ., துாரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவைகளை வாங்கிய பின், வீடுகளுக்கு சிரமப்பட்டு சென்று வந்தனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின், மூத்த குடி மக்களுக்காக தாயுமானவர் திட்டத்தின்படி வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். இதன்படி, நேற்று பவித்திரத்தில் உள்ள பாரதி நகர் ரேஷன் கடை பணியாளர்கள் முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று, ரேஷன் பொருட்களை வினியோகம் செய்தனர். இதனால், முதியவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us