/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
/
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
ADDED : பிப் 05, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் நடேசன், 73; இவரது மகன் சதீஷ்குமார், 44; எலக்ட்ரீஷியன். நேற்று முன்தினம் மாலை, பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், மின் பழுதை சரி செய்துகொண்டிருந்தார்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சதீஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.