sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

விமான படையில், அக்னிவீரர் திட்டத்தில் சேர தகுதியான விண்ணப்பம் வரவேற்பு

/

விமான படையில், அக்னிவீரர் திட்டத்தில் சேர தகுதியான விண்ணப்பம் வரவேற்பு

விமான படையில், அக்னிவீரர் திட்டத்தில் சேர தகுதியான விண்ணப்பம் வரவேற்பு

விமான படையில், அக்னிவீரர் திட்டத்தில் சேர தகுதியான விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஆக 10, 2025 12:48 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், 'இந்திய விமான படையில், அக்னிவீரர் திட்டத்தில் திட்ட ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் இருந்து இந்திய விமானப்படைக்கு 'அக்னி வீரர்' ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு, ஆள்சேர்ப்பு முகாம், தாம்பரம் விமானப்படை நிலையத்தில், வரும், செப்., 2ல் தொடங்குகிறது.

செப்., 2 முதல், ஆண்களுக்கும், செப்., 5 முதல் பெண்களுக்கும் நடக்கிறது. 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான கல்வியில் ஏதேனும் ஒரு பிரிவு தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில், 50 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2026ம் ஆண்டு, ஜன., 1-ல், பதினேழரை வயதுக்கு மேல், 21 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த தகுதி மற்றும் விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் செப்., 2 முதல், 5 வரை நடக்கும் ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

தகுதியுள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது, 04286-222260 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us