sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தமிழக அரசின் 'பசுமை சாம்பியன் விருது' தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

/

தமிழக அரசின் 'பசுமை சாம்பியன் விருது' தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் 'பசுமை சாம்பியன் விருது' தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் 'பசுமை சாம்பியன் விருது' தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜன 09, 2024 11:10 AM

Google News

ADDED : ஜன 09, 2024 11:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'தமிழக அரசின், 'பசுமை சாம்பியன் விருது' பெற, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு, தமிழக அரசின், 'பசுமை சாம்பியன்' விருது, மொத்தம், 100 பேருக்கு வழங்கப்படும். இந்த விருதுடன், தலா, ஒரு லட்சம் ரூபாய் வீதம் பண முடிப்பும் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்பு மற்றும் பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்.

நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மற்றும் நீர் மேலாண் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை உள்ளிட்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, 'பசுமை சாம்பியன் விருது' வழங்கப்படும்.

தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம், கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட, 'பசுமை சாம்பியன் விருது' தேர்வு செய்யும் குழு மூலம், தகுதி வாய்ந்த, 100 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யும்.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதற்கான விண்ணப்ப படிவத்தை, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். 'பசுமை சாம்பியன் விருது'க்கு விண்ணப்பிக்க, வரும், ஏப்., 15 கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us