/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'102', '108' ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்
/
'102', '108' ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : நவ 09, 2024 03:55 AM
நாமக்கல்: நாமக்கல்லில் நாளை, அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களான, '102', '108'ல் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கி-றது.
இதுகுறித்து, ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்கு-றிப்பு: நாமக்கல் - மோகனுார் சாலையில் அமைந்துள்ள, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்படும், '108' அவசர-கால ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், '102' மற்றும் '108' அவசர கால ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம், நாளை காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கி-றது.இதில், '102' ஆம்புலன்சில், சுகாதார அதிகாரியாக பணிபுரிய, கல்வித்தகுதிகளான, பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு, 19 முதல், 30க்குள் இருக்க வேண்டும். மாத ஊதியம், 18,000 ரூபாய் மொத்-தமாக வழங்கப்படும். இதேபோல், '108' ஆம்புலன்சில் மருத்-துவ உதவியாளராக பணிபுரிய, பி.எஸ்சி., நர்சிங் அல்லது ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., - டி.எம்.எல்.டி., (பிளஸ் 2விற்கு பின், 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி., ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு, தேர்வு அன்று, 19 வயது-க்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியம், 16,020 ரூபாய் மொத்த ஊதியமாக வழங்கப்படும்.
முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள், 50 நாட்கள் முழு-மையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்-படுவர். மேலும் விபரங்களுக்கு, 044-28888060, 75, 77, ஆகிய தொலைபேசி எண்களிலும், 9154250563 என்ற மொபைல் எண்-ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்-பட்டுள்ளது.