sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

/

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு


ADDED : நவ 22, 2024 01:31 AM

Google News

ADDED : நவ 22, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல்வர் மருந்தகம் அமைக்க

கால அவகாசம் நீட்டிப்பு

நாமக்கல், நவ. 22-

நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க நவ.,30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளதாக, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த ஆக.,15ம் தேதி சுதந்திர தின விழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக, 1,000 முதல்வர் மருந்தகங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.mudhalvarmarundhagam.tn.gov.in . என்ற இணைய தளம் மூலம் நவ.,20 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி நவ.,30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us