/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கலை கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்
/
அரசு கலை கல்லுாரியில் கண் பரிசோதனை முகாம்
ADDED : டிச 11, 2025 06:55 AM
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுா-ரியின், யூத் ரெட் கிராஸ், தனியார் கண் மருத்து-வமனையுடன் இணைந்து, கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பணியாளர்களுக்-கான கண் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கண் பரிசோதனை முகாம் நடத்தியது. கல்லுாரி முதல்வர்(பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கண் டாக்டர் ஷோபனா, கண் ஆரோக்-கியம், பார்வை பராமரிப்பு, உணவு பழக்க வழக்கம், அதிக நேரம் மொபைல் பயன்படுத்-துதல், நீண்ட நேரம் துாக்கமின்றி விழித்திருப்பது கண் பார்வையை பாதிக்கும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, நவீன கண் பரிசோதனை கருவி மூலம் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்-பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில், விலங்கியல் துறை தலைவர் ராஜசேகர பாண்டியன் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

