sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தீபாவளியை முன்னிட்டு துணி உற்பத்தி தீவிரம்; விற்பனை தொய்வு

/

தீபாவளியை முன்னிட்டு துணி உற்பத்தி தீவிரம்; விற்பனை தொய்வு

தீபாவளியை முன்னிட்டு துணி உற்பத்தி தீவிரம்; விற்பனை தொய்வு

தீபாவளியை முன்னிட்டு துணி உற்பத்தி தீவிரம்; விற்பனை தொய்வு


ADDED : அக் 12, 2024 07:33 AM

Google News

ADDED : அக் 12, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: தீபாவளி பண்டிகைக்காக, பள்ளிப்பாளையம் சுற்றுவட்டா-ரத்தில் விசைத்தறியில் துணி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகி-றது.

ஆனால், விற்பனை எதிர்பார்த்தளவு இல்லை என, உற்பத்தி-யாளர்கள் தெரிவித்தனர்.பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு காட்டன், ரயான், பாலீஸ்டர் உள்-ளிட்ட வகைகளில் சர்ட், சுடிதார், லுங்கி, வேட்டி, சேலை உள்-ளிட்ட துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்-படும்

துணிகள், இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்லும். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை சமயத்தில் உற்பத்-தியும், விற்பனை

அதிகரித்து காணப்படும்.கடந்த, 2 ஆண்டுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்து விட்டதால், விசைத்தறி

தொழில் சற்று ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த ஓராண்டாக விசைத்தறி தொழில் ஏற்றம் கொண்டு நடந்து வருகிறது.

விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால், உற்பத்-தியும் தீவிரமாக நடக்கிறது.இதுகுறித்து, நேருநகரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர் சர-வணன் கூறியதாவது:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, துணிகள் உற்பத்தி தீவிர-மாக நடந்து வருகிறது. விற்பனை என்பது எதிர்பார்த்தளவுக்கு

இல்லை. ஓரளவுக்கு நடந்து வருகிறது.இன்னும் சில நாட்களில் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்-பார்ப்பில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us