/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மரவள்ளி கிழங்கு விலை உயர்வு மகிழ்ச்சியில் விவசாயிகள்
/
மரவள்ளி கிழங்கு விலை உயர்வு மகிழ்ச்சியில் விவசாயிகள்
மரவள்ளி கிழங்கு விலை உயர்வு மகிழ்ச்சியில் விவசாயிகள்
மரவள்ளி கிழங்கு விலை உயர்வு மகிழ்ச்சியில் விவசாயிகள்
ADDED : நவ 22, 2024 01:30 AM
மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
மகிழ்ச்சியில் விவசாயிகள்
ப.வேலுார், நவ. 22--
மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு, 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனுார், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதார், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலைகளுக்கு அனுப்புவர்.
ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று, 7,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு, 500 ரூபாய் உயர்ந்து, 7,500க்கு விற்கிறது.
மரவள்ளி கிழங்கு வெட்டும் கூலி தொழிலாளர்கள், தீபாவளியை முன்னிட்டு, சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் பணிக்கு திரும்பாததால், அறுவடை குறைவாக உள்ளது. மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.