/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரசாயன கழிவுடன் பாயும் திருமணிமுத்தாறு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் கண்ணீர்
/
ரசாயன கழிவுடன் பாயும் திருமணிமுத்தாறு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் கண்ணீர்
ரசாயன கழிவுடன் பாயும் திருமணிமுத்தாறு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் கண்ணீர்
ரசாயன கழிவுடன் பாயும் திருமணிமுத்தாறு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் கண்ணீர்
ADDED : நவ 13, 2024 03:39 AM
வெண்ணந்துார்:வெண்ணந்துார்
வழியாக செல்லும் திருமணிமுத்தாறு, ரசாயன கழிவுடன்
பாய்ந்தோடுவதால், அதனை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாமல்
விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில்
உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார்
மதியம்பட்டி வழியாக சென்று, பரமத்தி வேலுார் காவிரி ஆற்றில்
கலக்கிறது. இந்த திருமணிமுத்தாற்றில், சேலம் பகுதியில் இருந்து
வெளியேறும் கழிவுநீர், திருமணிமுத்தாற்றை ஒட்டியுள்ள
சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் கலக்கின்றன.
சில தினங்களாக பெய்த கனமழையால், திருமணிமுத்தாற்றில் வெள்ளம்போல்
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது, மதியம்பட்டி வழியாக
செல்லும் திருமணிமுத்தாற்றில், வெண்மை நிற நுரையுடன் தண்ணீர்
பாய்கிறது. ரசாயன கழிவுடன் கூடிய இந்த நீரை விவசாயிகள் பயன்படுத்த
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மதியம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
திருமணிமுத்தாற்றில்,
தற்போது ஆறு நிறைய தண்ணீர் உள்ளது. இருப்பினும், ரசாயன கழிவுகள்
கலந்து நுரையுடன் ஓடுகிறது. பல ஆண்டுகளாகவே இதே நிலை நீடிக்கிறது.
எங்கள் கிராமப்பகுதி வழியாக ஓடும் இந்த ஆற்றுநீரை, பல ஆண்டுகளாக
எங்களால் பயன்படுத்த முடியவில்லை. இப்பகுதியில் உள்ள விவசாயிகள்,
திருமணிமுத்தாற்றை நம்பியே பயிர் செய்கின்றனர்.
திருமணிமுத்தாற்றை சீரமைக்க வேண்டும் என, அரசுக்கு பலமுறை கோரிக்கை
விடுத்தும், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் நிலையிலும்,
இந்த நீரில் இருந்து ஒரு துளி கூட எங்களால் பயன்படுத்த முடியாத நிலை
உள்ளது. இதேநிலை நீடித்தால் விவசாயத்தை காப்பாற்ற முடியாத நிலைக்கு
தள்ளப்படுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.