sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'வேளாண் அடுக்கம் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்'

/

'வேளாண் அடுக்கம் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்'

'வேளாண் அடுக்கம் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்'

'வேளாண் அடுக்கம் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்'


ADDED : பிப் 14, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 14, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: எருமப்பட்டி யூனியனில், வேளாண் அடுக்கம் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலர்களிடம், ஆவணங்களை கொடுத்து பயன் பெறலாம் என, வேளாண் உதவி இயக்குனர் செல்வி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் அடுக்கம் திட்டம், எருமப்பட்டி யூனியனில் வருவாய் கிராமம் வாரியாக பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் நிலம் விபரம், விவசாயிகள் விபரம், நில உடமை வாரியாக புவிசார் குறியீடு, பயிர் சாகுபடி விபரங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு விவசாயிக்கும் தனி குறியீட்டு எண் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, அவர்களின் தகவல் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.

இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகள் தரவுத்தளத்தில் வழங்கப்படும், இதற்காக, அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண், அடிப்படையில் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்யப்படும். எருமப்பட்டி விவசாயிகள், தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலர்களிடம், ஆவணங்களை கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us