/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 23, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், :நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில், வரும், 25 காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
கூட்டத்தில், வேளாண் இடுபொருள் இருப்பு விபரம், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.