/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குண்டுமல்லி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
/
குண்டுமல்லி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 29, 2025 01:25 AM
எருமப்பட்டி, எருமப்பட்டி பகுதியில், குண்டுமல்லி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
எருமப்பட்டி யூனியனில், பொட்டிரெட்டிபட்டி, அலங்காநத்தம், நவலடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் தினமும் வருமானம் தரக்கூடிய குண்டு மல்லிகை பூக்களை பயிரிட்டுள்ளனர்.
அதிகாலை பூக்களை பறித்து நாமக்கல், கரூர், ஈரோடு பகுதிகளில் நடக்கும் தினசரி மார்க்கெட்டுகளுக்கு வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர்.நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, குண்டுமல்லி விலை கிலோ, 1,500 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில் நேற்று முகூர்த்த தினம் என்பதால், குண்டுமல்லி கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.