/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகள் காதல் திருமணம் தாக்கிய சித்தப்பா கைது
/
மகள் காதல் திருமணம் தாக்கிய சித்தப்பா கைது
ADDED : ஆக 19, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அருகே, ஆயில்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன்கள் கண்ணன், 42, மணிகண்டன், 36; கூலி வேலை செய்து வருகின்றனர். கண்ணன் மகள் பிரதீபாவை, அதே பகுதியை சேர்ந்த கவின்ராஜ் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மணிகண்டன், நேற்று கவின்ராஜ் உறவினரான சாமிதுரை உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த சாமிதுரை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சாமிதுரை அளித்த புகார்படி, ஆயில்பட்டி போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.