/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொரோனாவில் பெற்றோரை இழந்த 2 பேருக்கு ரூ.70,000 நிதி உதவி
/
கொரோனாவில் பெற்றோரை இழந்த 2 பேருக்கு ரூ.70,000 நிதி உதவி
கொரோனாவில் பெற்றோரை இழந்த 2 பேருக்கு ரூ.70,000 நிதி உதவி
கொரோனாவில் பெற்றோரை இழந்த 2 பேருக்கு ரூ.70,000 நிதி உதவி
ADDED : ஜன 09, 2024 11:12 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம், 439 மனுக்கள் வரப்பெற்றன.
அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த கிஷோர் கண்ணாவுக்கு, 30,000 ரூபாய், பிரதீஷ் கண்ணாவுக்கு, 40,000 ரூபாய் என, மொத்தம், 70,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கொண்டிசெட்டிப்பட்டி, அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்திற்கு முன்பணம் நிதியாக, 2.40 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கலெக்டர் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், ஆர்.டி.ஓ.,க்கள் சரவணன், சுகந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.