/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார் பட்டறையில் தீ விபத்து 7 கார், 2 டூ-வீலர் நாசம்
/
கார் பட்டறையில் தீ விபத்து 7 கார், 2 டூ-வீலர் நாசம்
கார் பட்டறையில் தீ விபத்து 7 கார், 2 டூ-வீலர் நாசம்
கார் பட்டறையில் தீ விபத்து 7 கார், 2 டூ-வீலர் நாசம்
ADDED : ஆக 03, 2025 03:02 AM

ராசிபுரம்:ராசிபுரம் அருகே, கார் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு கார்கள், இரண்டு டூ-வீலர்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கதிராநல்லுாரை சேர்ந்தவர் கோபால், 45; இவர், ஆண்டகளூர்கேட் பகுதியில், கார் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பணியை முடித்து, பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று காலை, 6:00 மணிக்கு, இவரது கார் பட்டறையில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள், கோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், டூ-வீலர்களில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
தீயணைப்பு வீரர்கள், பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், இரண்டு டூ-வீலர், ஏழு கார்கள் முற்றிலும் எரிந்தன. உதிரி பாகங்களும் எரிந்தன. இவற்றின் மதிப்பு, 25 லட்சம் ரூபாய். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.