sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பலகாரங்களில் செயற்கை நிறமூட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

/

பலகாரங்களில் செயற்கை நிறமூட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

பலகாரங்களில் செயற்கை நிறமூட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

பலகாரங்களில் செயற்கை நிறமூட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை


ADDED : அக் 14, 2024 06:17 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க செயற்கை நிற-மூட்டிகளை பயன்படுத்தினால், பலகார வகைகள் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்படும் என, ப.வேலுார் உணவு பாது-காப்பு அலுவலர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பரமத்தி வேலுார் தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி ஹோட்டல், ரெஸ்டாரன்ட், பேக்கரி, திரு-மண மண்டபங்கள் மற்றும் பல பகுதிகளில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு தயா-ரிக்கப்படும் உணவு வகைகளில் செயற்கை நிறமூட்டிகளை பயன்-படுத்த கூடாது. மேலும், இனிப்பு கார வகைகள் தயாரிக்க உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டும். சுத்-தமான, சுகாதாரமான இடங்களில் மட்டுமே இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும்.ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் வகைகளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தரமான மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டும். பலகார வகைகளை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தக் கூடாது. விதிகளை மீறினால், பலகாரங்களை பறி-முதல் செய்து, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us