sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சங்ககிரியில் மர்ம விலங்கு நடமாட்டம் வனத்துறை, வருவாய் துறையினர் ஆய்வு

/

சங்ககிரியில் மர்ம விலங்கு நடமாட்டம் வனத்துறை, வருவாய் துறையினர் ஆய்வு

சங்ககிரியில் மர்ம விலங்கு நடமாட்டம் வனத்துறை, வருவாய் துறையினர் ஆய்வு

சங்ககிரியில் மர்ம விலங்கு நடமாட்டம் வனத்துறை, வருவாய் துறையினர் ஆய்வு


ADDED : நவ 19, 2024 06:56 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் அதை ஒட்டியுள்ள மலைப்-பகுதிகளில், மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து, வனத்துறை அதி-காரிகள், வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை பின்புறம் மற்றும் அதை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான கலியனுார், செட்-டியார் காடு, ராயலுார் பகுதிகளில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாகவும், அதன் காலடித்தடம் பதிவாகி உள்ளதால், மலைக்கோட்டை செல்லும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கை-யாகவும் இருக்க வேண்டும் என, சங்ககிரி பகுதிகளில் உள்ள பெரும்பாலான வாட்ஸ்ஆப் குரூப்களில் கடந்த, 15ல் தகவல் பர-வியது.இதையடுத்து, சேலம் சேர்வராயன் மலைப்பகுதி வனவர் தினேஷ், வனக்காப்பாளர் முத்துராஜா கடந்த, 15 இரவில் 'ட்ரோன்' கேமரா மூலம் சங்ககிரி மலைப்பகுதி, சுற்றியுள்ள பகுதி-களில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சின்-னாக்கவுண்டனுார் கிராமம், ராயலுார் மலையங்காடு பகுதியில் தங்கமுத்து என்பவரது தோட்டத்தில், பராமரிப்பு பணி செய்து வரும் சேட்டு, 70, என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு, மர்ம விலங்கால் கடிபட்டுள்ளது.பின்னர், வனச்சரக அலுவலர் துரைமுருகன், வனவர் தினேஷ், சங்ககிரி வருவாய் ஆய்வாளர் மலர்விழி, சின்னாகவுண்டனுார் கால்நடை மருத்துவர் அன்னக்கொடி ஆகியோர் சம்பவ இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து, மூன்று வன அலுவ-லர்கள் சம்பவ இடத்திலேயே தங்கி, கேமராக்கள் அமைத்து கண்-காணிக்குமாறும், இன்று காலை ட்ரோன் மூலம் கண்காணிப்பதா-கவும் வனச்சரக அலுவலர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும் அப்பகுதி மக்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொள்-ளப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us