sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காந்தி ஆசிரம அலுவலகம் முன் முன்னாள் ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

காந்தி ஆசிரம அலுவலகம் முன் முன்னாள் ஊழியர் ஆர்ப்பாட்டம்

காந்தி ஆசிரம அலுவலகம் முன் முன்னாள் ஊழியர் ஆர்ப்பாட்டம்

காந்தி ஆசிரம அலுவலகம் முன் முன்னாள் ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : மே 18, 2025 05:16 AM

Google News

ADDED : மே 18, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த புதுப்பாளையம் காந்தி ஆசிரம தலைமை அலுவலகம் முன், முன்னாள் ஊழியர்

முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், காந்தி ஆசிரம முன்னாள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்-கொடை தொகை, விடுப்பு கால சம்பளம், ராட்டை நுாற்போர் கூலி, நெய்வோர் கூலி, நுாற்போர் நலநிதி ஆகியவற்றை நீண்ட காலமாக வழங்காமல் இருப்பதை கண்டித்தும், அவற்றை உடன-டியாக வழங்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்-டத்தில், ஒரு பெண் உள்பட, 25க்கும் மேற்பட்டோர் கலந்து-கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின், காந்தி ஆசிரமத்தில், 42 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் ஊழியர் முத்துசாமி, செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது: திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் துவங்-கப்பட்டு, 101 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ராட்டை மூலம் நுாலை உற்பத்தி செய்யாமல், போலியாக நுாற்போர்களை வைத்து கணக்கு காட்டி, ஊழல் செய்கின்றனர்.

காந்தி ஆசிரம கடையில் கதர் துணிகளோடு, மில் போர்வை, மில் பெட்ஷீட் ஆகியவற்றை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி மட்டும், 12 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us