sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தீபாவளிக்கு நான்கரை நாள் விடுமுறை பஸ் ஸ்டாண்டிற்கு படையெடுத்த பயணிகள்

/

தீபாவளிக்கு நான்கரை நாள் விடுமுறை பஸ் ஸ்டாண்டிற்கு படையெடுத்த பயணிகள்

தீபாவளிக்கு நான்கரை நாள் விடுமுறை பஸ் ஸ்டாண்டிற்கு படையெடுத்த பயணிகள்

தீபாவளிக்கு நான்கரை நாள் விடுமுறை பஸ் ஸ்டாண்டிற்கு படையெடுத்த பயணிகள்


ADDED : அக் 31, 2024 12:12 AM

Google News

ADDED : அக் 31, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:தீபாவளி பண்டிகையையொட்டி, நான்கரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊருக்கு செல்ல, நாமக்கல் பஸ் ஸ்டாண்டிற்கு பயணிகள் படையெடுத்தனர். அதனால், அனைத்து பஸ்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லுாரி, அரசின் அனைத்து துறைகளுக்கும், இன்று முதல் வரும், 3 வரை, நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நேற்று மதியம் முதல், அரசு பள்ளி, கல்லுாரிகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தீபாவளியையொட்டி, நான்கரை நாளாக விடுமுறை அதிகரித்துள்ளது.

தொடர்ந்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள் பணியாளர்கள், பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் என அனைவரும், தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

அதற்காக, நாமக்கல் மாவட்டத்தில், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக, நாமக்கல்-திருச்சி, 20, நாமக்கல் - சேலம், 15, நாமக்கல் - ஈரோடு, 15 என, மொத்தம், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து, நேற்று நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், தங்கள் ஊருக்கு செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க, பயணிகள் முண்டியடித்துக்கொண்டு செல்வதை காணமுடிந்தது. மேலும், பலர் தங்கள் ஊருக்கு செல்வதற்கான பஸ் வரும் வரை காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.

நாமக்கல்லில் இருந்து சேலம், திருச்சி, கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில், கூட்டம் நிரம்பி வழிந்தது. பஸ்சிற்குள் நின்று கொண்டும், படியில் தொங்கியபடியும் பயணிகள் சென்றனர்.

அதேபோல், கார், இருசக்கர வாகனங்களில், தங்கள் சொந்த ஊருக்கு செல்வோரும் அதிகரித்துள்ளது. அவர்கள், நாமக்கல் நகரை கடந்து சென்றதால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, சேலம் சாலை தொடங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us