/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரியில் நாற்பெரும் விழா
/
அரசு கல்லுாரியில் நாற்பெரும் விழா
ADDED : மார் 29, 2025 07:25 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் முத்தமிழ் விழா, கல்லுாரி ஆண்டு விழா, கல்லுாரி பேரவை நிறைவு விழா, விளையாட்டு விழா ஆகிய நாற்பெரும் விழா, கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது.
காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் நசீம் ஜான் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற-வர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து அவர் பேசு-கையில், ''மாணவ, மாணவியர் பயிலும் கல்வி வெறும் ஏட்டுக்-கல்வியாக இருக்கக் கூடாது. ஆக்கப்பூர்வமாக, தனக்கும் தன்னை சார்ந்தோருக்கும் மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். சமூக சேவைகளில் ஈடுபட-வேண்டும்,'' என்றார். நாமக்கல் அரசு கலை கல்லுாரி இணை பேராசிரியர் சந்திரசே-கரன், பேராசிரியர்கள் ரகுபதி, பத்மாவதி, சரவணாதேவி, ரமேஷ், மகாலிங்கம், மனோஜ், உடற்கல்வி இயக்குனர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.