sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 7ல், குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

/

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 7ல், குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 7ல், குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 7ல், குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்


ADDED : டிச 29, 2024 01:07 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், டிச. 29-

'மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும், ஜன., 7ல் துவங்குகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டப்படி நேரடியாக, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் ஜன., 7 காலை, 10:30 மணிக்கு துவங்குகிறது.

நம் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2024ல் வெளியான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், 22 பேர், டி.என்.யு.எஸ்.ஆர்.பி., - எஸ்.ஐ., தேர்வில், 5 பேர், பி.சி., தேர்வில், 13 பேர், குரூப்-2, 2ஏ., முதல்நிலை தேர்வில், 24 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பாடவாரியாக, சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286--222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிபரத்தை பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us