/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 7ல், குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
/
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 7ல், குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 7ல், குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன., 7ல், குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : டிச 29, 2024 01:07 AM
நாமக்கல், டிச. 29-
'மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும், ஜன., 7ல் துவங்குகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டப்படி நேரடியாக, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் ஜன., 7 காலை, 10:30 மணிக்கு துவங்குகிறது.
நம் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2024ல் வெளியான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், 22 பேர், டி.என்.யு.எஸ்.ஆர்.பி., - எஸ்.ஐ., தேர்வில், 5 பேர், பி.சி., தேர்வில், 13 பேர், குரூப்-2, 2ஏ., முதல்நிலை தேர்வில், 24 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பாடவாரியாக, சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286--222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிபரத்தை பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.