/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 28, 2024 05:05 AM
நாமக்கல்: 'நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், காஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து ஆயில் மற்றும் காஸ் நிறுவன மேலாளர்கள், காஸ் முக-வர்கள், வினியோகஸ்தர்கள், நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுக்கான, 'காஸ் நுகர்வோர் குறைதீர்' கூட்டம், வரும், 29 காலை, 11:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கி-றது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகிக்கிறார். அதில், காஸ் வினி-யோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள், இந்த கூட்டத்தில் கலந்து-கொண்டு காஸ் வினியோகம் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.