ADDED : மே 06, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி:
எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, முட்டாஞ்செட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
எருமப்பட்டி பகுதியில் சித்திரை மாத மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் நடப்பதால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை போட்டி பேட்டு வாங்கி சென்றனர். இதனல், நேற்று, 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.