sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

முன்னுரிமை அடிப்படையில் 'லோடு' வழங்க கூட்ஸ்செட் லாரி ஓனர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை

/

முன்னுரிமை அடிப்படையில் 'லோடு' வழங்க கூட்ஸ்செட் லாரி ஓனர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை

முன்னுரிமை அடிப்படையில் 'லோடு' வழங்க கூட்ஸ்செட் லாரி ஓனர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை

முன்னுரிமை அடிப்படையில் 'லோடு' வழங்க கூட்ஸ்செட் லாரி ஓனர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை


ADDED : பிப் 13, 2024 12:14 PM

Google News

ADDED : பிப் 13, 2024 12:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'டோக்கன் பெறும் லாரிகளுக்கு மட்டுமே, லோடு செய்யும் நடைமுறையை மாற்றி, முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் கூட்ஸ்செட் லாரி ஓனர்ஸ் அசோசியேஷன் சார்பில், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில், கடந்த, 10 ஆண்டுகளாக வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொருட்களை எங்களது கூட்ஸ்செட் லாரிகள் மூலம் ஏற்றி சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு இறக்கி வருகிறோம். இந்நிலையில், 2023 டிச., 15 முதல், முன்னறிவிப்பின்றி, அசோசியேசன் மூலம் லோடுகளை எடுக்க வேண்டும். மேலும், எடுக்கப்படும் லாரிகளுக்கு, 100 ரூபாய் வீதம் பணம் கட்ட வேண்டும் என நிர்ப்பந்தம் செய்கின்றனர்.

நாங்கள், 10 ஆண்டுகளாக, 80 லாரிகளை வைத்து, அதன் டிரைவர், கிளீனர், லாரி உரிமையாளர் அனைவரும், இவற்றை நம்பி பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது, அசோசியேசன் மூலம், 100 ரூபாய் செலுத்தி டோக்கன் பெற்று செல்லும் வண்டிகளுக்கு மட்டும் லோடு ஏற்ற வேண்டும் என, நிர்ப்பந்தம் செய்கின்றனர்.

வெளிமாவட்ட வண்டிகளும் இங்கு வந்து லோடு ஏற்றிச்செல்கிறது. அதனால், எங்களுடைய, 80 லாரிகளும் லோடு ஏற்றாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லாரிகளுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. எங்கள் நிலையை கருத்தில் கொண்டும், எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், 10 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதை பின்பற்றுவதுடன், லாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் லோடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us