ADDED : மே 07, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்:தமிழக அரசு ஊழியர் சங்கத்தின், 42வது அமைப்பு தினம், நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
ராசிபுரம் நகரில் அரசு துறை அலுவலகங்கள் முன், அரசு ஊழியர் சங்க கொடி ஏற்றினர். தொடர்ந்த, பொதுமக்கள், நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதர், தாமோதரன் உள்பட அனைத்து துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சங்கத்தின் கொள்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

