sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு: மக்கள் புகார்

/

கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு: மக்கள் புகார்

கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு: மக்கள் புகார்

கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு: மக்கள் புகார்


ADDED : ஆக 16, 2024 05:33 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: சமயசங்கிலி பகுதியில், சாயக்கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது, மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, சமயசங்கிலி பஞ்., தொட்டிபாளையம் பகுதியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், சமயசங்கிலி பகுதியில் செயல்படும், சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயகழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை குடிக்கும் மக்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. இது குறித்து, குமாரபாளையம் மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை, ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் மாசுகட்டுபாட்டுவாரிய அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், அதிகாரிகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூட்டத்திற்கு வர வேண்டும். அதுவரை ஒத்தி வைக்க வேண்டும் என்றனர்.இதையடுத்து யூனியன் அதிகாரிகள், போலீசார் வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க முடியாது, தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை மனுவாக கொடுங்கள், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர். இதன் பிறகு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us