ADDED : டிச 31, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், நவலடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி பூக்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பூக்களை விவசாயிகள் தினமும் பறித்து நாமக்கல், ஈரோடு, கருர் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பூ மார்க்கெட்டுகளுக்கு ஏலத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
சில நாட்களாக எருமப்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால், 15 நாட்களாக ஒரு கிலோ குண்டுமல்லி, 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று, ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா மற்றும் நாளை புத்தாண்டை முன்னிட்டு, கடந்த, 2 நாட்களாக குண்டுமல்லி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ, 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.