/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பூக்கள் தேவை குறைந்ததால் ரூ.800க்கு விற்ற குண்டுமல்லி
/
பூக்கள் தேவை குறைந்ததால் ரூ.800க்கு விற்ற குண்டுமல்லி
பூக்கள் தேவை குறைந்ததால் ரூ.800க்கு விற்ற குண்டுமல்லி
பூக்கள் தேவை குறைந்ததால் ரூ.800க்கு விற்ற குண்டுமல்லி
ADDED : ஜன 31, 2024 03:35 PM
ப.வேலுார் : பொங்கல், தைப்பூச திருவிழா முடிந்ததால், பூக்களின் தேவை குறைந்து குண்டுமல்லி கிலோ, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகா பகுதிகளான சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
விவசாயிகள் தினந்தோறும் பூக்களை அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு கொண்டு வந்து, ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், மார்க்கெட்டிற்கும் வரத்து அதிகமானது.ஆனால், பொங்கல், தைப்பூச திருவிழா நிறைவடைந்ததால், பூக்களின் தேவை குறைந்து விலை சரிந்தது. அதன்படி, கடந்த வாரம், 1,200 ரூபாய்க்கு விற்ற ஒருகிலோ குண்டுமல்லி, நேற்று, 800 ரூபாய்க்கும், 140 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 40 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்ற அரளி, 100 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 80 ரூபாய்க்கும், 1,200 ரூபாய்க்கு விற்ற முல்லைப்பூ, 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.