/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கஞ்சா வழக்கில் கைதாகி சேலம் சிறையில் உள்ள இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
/
கஞ்சா வழக்கில் கைதாகி சேலம் சிறையில் உள்ள இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
கஞ்சா வழக்கில் கைதாகி சேலம் சிறையில் உள்ள இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
கஞ்சா வழக்கில் கைதாகி சேலம் சிறையில் உள்ள இருவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : ஆக 07, 2025 01:36 AM
நாமக்கல், நாமக்கல் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால், கஞ்சா விற்க வைத்திருந்த குற்றத்திற்காக, எருமப்பட்டியை சேர்ந்த திருப்பதி, 23, விக்னேஷ்வரன், 20, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதில், திருப்பதி மீது, இரண்டு கஞ்சா வழக்குகளும், விக்னேஷ்வரன் மீது, ஒரு திருட்டு வழக்கு, இரண்டு கஞ்சா வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்கள், பெற்றோர் அரவணைப்பில் இல்லாத மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி, கஞ்சா விற்க பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, நாமக்கல் எஸ்.பி., விமலா, கூடுதல் எஸ்.பி., தனராசு ஆகியோர் பரிந்துரைப்படி, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி, சேலம் மத்திய சிறைக்கு சென்று, நாமக்கல் மதுவலக்கு போலீசார், திருப்பதி, விக்னேஸ்வரன் ஆகிய இருவருக்கும், குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை
வழங்கினர்.