ADDED : செப் 30, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல் நாமக்கல், அன்பு நகரை சேர்ந்தவர் பேரோஸ், 22; இவர், நேற்று மாலை தன் டூவீலரில், சேலம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். முதலைப்பட்டி அருகே சென்றபோது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக சென்றார்.
அப்போது, நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் வெளியேறியது. அவ்வழியாக வாகனத்தில் வந்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், உடனடியாக தன் வாகனத்தை நிறுத்தி படுகாயமடைந்த பேரோசை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.