/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 08, 2025 09:19 AM

ப.வேலுார்: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை தடுக்கும், தி.மு.க., அரசை கண்டித்து, நேற்று ப.வேலுார், பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவில் முன், நாமக்கல் மாவட்ட இந்து முன்-னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரமேஷ் முன்-னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்-சியில் உள்ள தீபத்துாணில், பல ஆயிரம் ஆண்டு-களாக நம் முன்னோர் தீபம் ஏற்றி வந்தனர். ஆனாலும், தமிழக அரசு அதை நடைமுறைப்ப-டுத்தவில்லை. 1996ம் ஆண்டு தீர்ப்பின் அடிப்ப-டையில், தீபத்துாணில் தீபம் ஏற்ற மதுரை உயர்-நீதிமன்றம் மற்றும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் அனுமதி வழங்கியும், தமிழக அரசு அனுமதி வழங்காமல், 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளதை, வன்மையாக கண்டிக்கிறோம் என, கோஷம் எழுப்பினர்.
ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா, இன்ஸ்பெக்-டர்கள் இந்திராணி, தேவி ஆகியோர், ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்ட, 60 பேரை கைது செய்து, ப.வேலுாரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்-டபத்தில் அடைத்தனர். இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

