sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

உழைத்தால் இந்த இயக்கத்தில் மட்டும் தான் பதவி தேடி வரும்: தங்கமணி

/

உழைத்தால் இந்த இயக்கத்தில் மட்டும் தான் பதவி தேடி வரும்: தங்கமணி

உழைத்தால் இந்த இயக்கத்தில் மட்டும் தான் பதவி தேடி வரும்: தங்கமணி

உழைத்தால் இந்த இயக்கத்தில் மட்டும் தான் பதவி தேடி வரும்: தங்கமணி


ADDED : செப் 17, 2025 02:04 AM

Google News

ADDED : செப் 17, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் :அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை, நாமக்கல் மாவட்டத்தில், வரும், 19, 20, 21 என, மூன்று நாட்கள் மேற்கொள்கிறார். அதையொட்டி, ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் சரோஜா, ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்து பேசியதாவது:

நாம் உழைத்தால், இந்த இயக்கத்தில் மட்டும்தான் எந்த பதவி வேண்டுமானாலும் தேடி வரும். நம் இத்தனை பேரின் உழைப்பால் தான், கடந்த லோக்சபா தேர்தலில், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, வரும் சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ்.,சை அனைத்து சார்பு அணியினரும், சிறப்பாக வரவேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாமக்கல் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் தமிழ்மணி, மாநில இணை செயலாளர் மோகன், மாநில வக்கீல் அணி துணை செயலாளர் பாலுசாமி, ஐ.டி., விங்க் மாவட்ட செயலாளர் முரளிபாலுசாமி, சார்பு அணி மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us