sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

78 வழக்குகளில் தொடர்புடையவர் தப்பியபோது கால் எலும்பு முறிவு

/

78 வழக்குகளில் தொடர்புடையவர் தப்பியபோது கால் எலும்பு முறிவு

78 வழக்குகளில் தொடர்புடையவர் தப்பியபோது கால் எலும்பு முறிவு

78 வழக்குகளில் தொடர்புடையவர் தப்பியபோது கால் எலும்பு முறிவு


ADDED : பிப் 02, 2025 01:43 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்:ராசிபுரத்தில், 78 வழக்குகளில் தொடர்புடையவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தபோது, தப்ப முயன்றதில் தவறி விழுந்து, இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி, 45; அரசு ஊழியர். கடந்த மாதம், 20ல் இவரது வீட்டில், 19 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். ராசிபுரம் போலீசார் விசாரித்தனர்.

நேற்று அதிகாலை, ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, டூ-வீலரில் அவ்வழியாக வந்த, மூவரை போலீசார் நிறுத்தினர். அவர்கள் வண்டியை நிறுத்தாமல் தப்பிச்செல்ல முயன்றபோது, வேகத்தடையில் தடுமாறி விழுந்ததில், ஒருவருக்கு கால், மற்றொருவருக்கு கை, காலில் எலும்பு முறிந்தது. மற்றொரு வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

காயமடைந்த இருவரையும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், 47, சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், 23, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணி, 22, என, தெரிந்தது. இதில், மணிகண்டன் மீது மதுரை, சேலம், சென்னை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் 78 வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us