/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விளைச்சல் அதிகரிப்பு பூக்கள் விலை சரிவு
/
விளைச்சல் அதிகரிப்பு பூக்கள் விலை சரிவு
ADDED : செப் 26, 2024 02:17 AM
ப.வேலுார்: ப.வேலுார் தாலுகா பகுதியில் உள்ள சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். சில வாரங்களாக பூ விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 700 ரூபாய்க்கு விற்ற குண்டுமல்லி, 400 ரூபாய்க்கும்; 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 40 ரூபாய்க்கும்; 150
ரூபாய்க்கு விற்ற அரளி, 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பூ விவசாயிகள் கவலையடைந்தனர்.