/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
/
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
சேந்தமங்கலம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு
ADDED : ஜூன் 16, 2025 07:30 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அரசு கலைக் கல்லுாரி முதல்வர் பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:நடப்பு, 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த, 2 முதல் நடந்து வருகிறது. பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தேதி வாரியாக அழைக்கப்பட்டு கலந்தாய்வு மூலம் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ் துறையில், 33, ஆங்கிலம், 52, வணிகவியல், 24, தாவரவியல், 30, கணினி அறிவியல் துறையில், 15 என மொத்தம், 154 இடங்கள் காலியாக உள்ளன.
இக்கல்லுாரியில் விண்ணப்பித்து, இதுவரை சேர்க்கை கிடைக்காத மாணவ, மாணவியருக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இன்று நடக்கிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் தேவையான அனைத்து சான்றுகளுடன், கல்லுாரிக்கு நேரில் வந்து மதிப்பெண் அடிப்படையில் சேரலாம். மேலும் தகவல் பெற, 9865428419, 9443340934, 9677844519 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.