/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெல்லம் விலை உயர்வு ரூ.40 லட்சத்துக்கு வர்த்தகம்
/
வெல்லம் விலை உயர்வு ரூ.40 லட்சத்துக்கு வர்த்தகம்
ADDED : டிச 01, 2024 01:29 AM
வெல்லம் விலை உயர்வு
ரூ.40 லட்சத்துக்கு வர்த்தகம்
ப.வேலுார், டிச. 1--
பரமத்தி வேலுார் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பமாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்கெட்டில், சனி, புதன் கிழமைகளில் விற்பனை செய்கின்றனர். அதன்படி, நேற்று இங்குள்ள, 13 வெல்ல மண்டியில் ஏலம் நடந்தது.
பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் வெல்லம் விலை உயர்ந்தது. கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,220 ரூபாய்-, அச்சுவெல்லம், 1,230 -ரூபாய்க்கு விற்பனையானது. இந்த வாரம் உருண்டை வெல்லம், ஒரு சிப்பம், 1,260 ரூபாய்க்கும், அச்சுவெல்லம், ஒரு சிப்பம், 1,340 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று நடந்த ஏலத்தில், உருண்டை வெல்லம், 2,700, அச்சு வெல்லம், 350, சிப்பங்களும், ஏலத்திற்கு வந்திருந்தது. மொத்தம், 40 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில், வெல்லம் விலை உயர்வால், கரும்பு பயிரிட்ட விவசாயிகள், வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.