/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்
/
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்
திருஞானசம்பந்தர் மடாலயத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம்
ADDED : அக் 17, 2025 01:36 AM
ப.வேலுார், ப.வேலுார், திருஞானசம்பந்தர் மடாலயத்தில், கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடந்தது. 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, திண்டுக்கல் சித்தா டாக்டர் அசோகன் கூறியதாவது:
உடலில் உள்ள நோய்களை, மூலிகை சாற்றினை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்குவது கலிக்கம் சிகிச்சை. இதனால் கிட்ட பார்வை, துாரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், கண்புரையை சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பப்பை பாதிப்பு, தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில், அசைவம் சாப்பிடக்கூடாது. ஐ.ஓ.எல்., லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும், இந்த மருந்தை விட்டுக் கொள்ளலாம். மருந்தை விட்டுக் கொள்வதில் கால நிர்ணயம் இல்லை.
இவ்வாறு கூறினார்.
மேலும் மாதந்தோறும், 1ம் தேதி, 16ம் தேதி ப.வேலுார் திருஞானசம்பந்தர் மடாலயத்திலும், ஒவ்வொரு மாதம், 25ம் தேதி ப.வேலுார் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.