/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காரீப் பருவ பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு
/
காரீப் பருவ பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு
காரீப் பருவ பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு
காரீப் பருவ பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 04, 2025 01:20 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், 2025--26ம் ஆண்டு பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம், காரீப் பருவத்தில் அக்ரிகல்சர் இன்சுரன்ஸ் கம்பெனி இந்தியா லிட் என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது. தற்போது, பச்சைப்பயறு, நிலக்கடலை
, சோளம், மக்காச்சோளம், பருத்தி, சிறிய வெங்காயம், தக்காளி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை பயிர்கள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பச்சைப்பயறு பயிருக்கு, பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு தலா, 335.92- ரூபாயை வரும், 15க்குள்ளும், நிலக்கடலை பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, 434.72 -ரூபாயை ஆக., 16ம் தேதிக்குள்ளும், சோளம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, 143.02 -ரூபாயை ஆக., 16க்குள்ளும், மக்காச்சோளம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, 642.20- ரூபாயை செப்., 16க்குள்ளும், பருத்தி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, 535.48- ரூபாயை செப்., 16ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.மேலும் தோட்டக்கலை பயிர்களான, சிறிய வெங்காயம் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, 1,252.30- ரூபாயை செப்., 1க்குள், தக்காளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, 1,840.16- ரூபாய் செப்., 1ம் தேதிக்குள், மரவள்ளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, 523.94 ரூபாயை செப்.,16க்குள், மஞ்சள் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, 4,107.62- ரூபாயை செப்., 16ம் தேதிக்குள் மற்றும் வாழை பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு, 1,894.50 ரூபாயை செப்., 16க்குள்ளும் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விபரம் பெற, பயிர் காப்பீடு இணையதள முகவரியில் (www.pmfby.gov.in) அணுலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.