sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொங்கு திருப்பதி கோவில் வழிபாட்டிற்கு திறக்க ஆய்வு

/

கொங்கு திருப்பதி கோவில் வழிபாட்டிற்கு திறக்க ஆய்வு

கொங்கு திருப்பதி கோவில் வழிபாட்டிற்கு திறக்க ஆய்வு

கொங்கு திருப்பதி கோவில் வழிபாட்டிற்கு திறக்க ஆய்வு


ADDED : நவ 05, 2025 01:14 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, தாஜ்நகர் பகுதியில் கொங்கு திருப்பதி கோவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இக்கோவிலுக்கு, நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர்.

புரட்டாசி மாதத்தில் விசேஷமாக காணப்படும். 'வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில், கோவில் கட்டப்பட்டுள்ளதால் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். மீட்கப்பட்ட நிலத்தை ஏலம் விட வேண்டும். ஏலம் யாரும் எடுக்காவிட்டால், அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம், இரண்டு ஆண்டுக்கு முன் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்த, கொங்கு திருப்பதி கோவிலை, ஈரோடு வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் கையகப்படுத்தினர். கடந்த, இரண்டு ஆண்டாக கோவில் பூட்டப்பட்டிருந்த நிலையில், வழிபாட்டிற்கு திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று குமாரபாளையம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கொங்கு திருப்பதி கோவிலுக்குள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொங்கு திருப்பதி கோவிலில் வரும், 15 மாலை வாஸ்து பூஜை நடக்கும்; மறுநாள் காலை, சுதர்சன ஹோமம் நடக்கும். இதையடுத்து சுவாமி தரிசனம் நடக்கும்'

என்றனர்.






      Dinamalar
      Follow us