நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் அடுத்த நல்லிபாளையத்தில், நேற்று மாலை, கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா நடந்தது.
அதில் நடந்த பஜனை நிகழ்ச்சியில், 'ஹரே கிருஷ்ண ஹரே ராமா' என, தொடர்ந்து பாடினர். 6:30 மணிக்கு அபிஷேகம் மற்றும் ஆரத்தி நடந்தது. 7:00 மணிக்கு சேலம் வி.இ.டி., மாணவர்கள் நடத்திய, 'கோவர்தன லீலை' நாடகம் அனைவரையும் கவர்ந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.