sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அடுப்பு, பானை இலவசமாக வழங்க குலாலர் சங்கம் கோரிக்கை

/

களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அடுப்பு, பானை இலவசமாக வழங்க குலாலர் சங்கம் கோரிக்கை

களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அடுப்பு, பானை இலவசமாக வழங்க குலாலர் சங்கம் கோரிக்கை

களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அடுப்பு, பானை இலவசமாக வழங்க குலாலர் சங்கம் கோரிக்கை


ADDED : நவ 11, 2025 06:42 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'தை பொங்கல் அன்று வேட்டி, சேலை வழங்குவதுபோல், களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அடு ப்பு, பானை ஆகியவற்றை இலவசமாக வழங்கி, எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட குலாலர் சங்க, மாவட்ட தலைவர் சிங்காரவேலு, பொருளாளர் தங்கராசு, மாநில துணைத்-தலைவர் தனபால் ஆகியோர், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி-யிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மழைக்கால நிவாரண தொகை வழங்க, 936 மனுக்கள் அரசுக்கு அனுப்பி உள்ளோம். அதில், 226 மனுக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மேலும், நிலு-வையில் உள்ள மனுக்களுக்கும் நிவாரண தொகை அரசு வழங்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டபாண்ட தொழிலாளர்க-ளுக்கு சூலைமேடு பகுதி க்கு அடிமனை பட்டா வழங்க வேண்டும். எங்கள் தொழில் வளம்பெற, தை பொங்கல் அன்று வேட்டி, சேலை வழங்குவதுபோல், களிமண்ணால் தயாரிக்கப்-பட்ட அடுப்பு, பானை ஆகியவற்றை எங்களிடம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி, எங்களின் வாழ்-வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை, திருமண உதவித்-தொகை மற்றும் நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு, கல்வியில் இடைஒதுக்கீடு முன்னுரிமை அளித்தும், மழைக்கால நிவாரணத்-தொகை, 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, தமிழக முதல்வர் நட-வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us